58.நாட்டுப் பாடல்.



"நாட்டுப் பாடல்" என்ற உடன் "நாட்டுப்புறப் பாடல்" என்று நினைத்து, ஒரு புஷ்ப்பவனம் குப்புசாமின் பாடலையோ, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடலையோ, atleast தஞ்சை செல்வியின் பாடலையோ எதிர்பார்த்து வந்திருந்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள்".

இது மழலையர் பாடல்(Nursery Rhymes).நாடுகளை வரிசைப் படுத்திப் பாடும் பாடல்

அழகாக அனைத்து நாட்டுப் பெயர்களையும் இணைத்து ராகத்தோடு பாடியும், வரைபடத்தில் அந்த நாட்டை காட்டியும், சித்தரித்து இருக்கும் "நாட்டுப் பாடல்" ("Country Rhymes"!!). சிறுவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

Buffering முடிந்து முழுமையாக பார்த்தால் நன்றாக ரசிக்கலாம்.




USA வரை படத்தில், மாநிலத்தின் பெயரைக் கேட்ட உடன் சுட்டிக் காட்டும் இந்த "சுட்டி" யின் திறமையும், ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டிவிட்டு ஆடும் ஆட்டமும் கண்டிப்பாக நம்மை வியக்க வைக்கும்.

Country Rymesஐ கேட்டதோடு இந்த சுட்டியின் ஆட்டதையும், ஞாபகசக்தியையும் கண்டு ரசிப்போம்.



57. ஆகஸ்ட் 15



ஆகஸ்ட்-- 15

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket


கீழே உள்ள "Flash" Load ஆகும் வரை காத்திருக்கவும்.


நன்றி: "web-India123.com" Greetings



Photobucketஅனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.Photobucket



56. ஆடி 18

ஆடி பதினெட்டு




வந்தாரை வாழவைப்பது மட்டும் தமிழரது பண்பாடு அல்ல, வாழ வைத்தாரை வணங்கி நன்றி செலுத்துவதும் கூட நமது மரபு, அது மனிதர்கள் ஆனாலும் சரி, மரங்களானாலும் சரி.

தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத்திற்கு மூல காரணமாகி, விவசாயியையும், நம்மையும் வாழ வைக்கும் கதிரவனுக்கு, தை முதல் தேதியில் வணங்கி நன்றியை தெரிவிக்கிறோம்.ஏர் உழுவது முதல் ஏற்றி வருவது வரை உதவிடும் மாட்டுக்கு, தை இரண்டாம் நாளில் பொங்கல் வைத்து சீராட்டுகிறோம்

பயிர்த்தொழிலுக்கு ஆதாரமான நீருக்கும் அதனை வாரிவழங்கும் நதிக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவே ஆடி பதினெட்டாம் பெருக்கு.


water


"சோறுடைத்த" நாட்டை வளமாகி வரும் காவேரிக் கரை ஓர மக்களின் முக்கிய விழாவாக ஆடிப்பெருக்கு காணப்படுகிறது. காவேரி ஓடாத ஊர்களில் கூட, அங்கே உள்ள ஆறுகளிலும் குளங்களிலும், முக்கியமாக பெண்களால் இவ்விழா கொண்டாடப்படுகிறது.



தமிழ் புதினத்தின் சிகரமான "பொன்னியின் செல்வன்" ஆரம்பிப்பது கூட இதேபோன்ற ஒரு ஆடிப்பெருக்கு விழா அன்றுதான். வீர நாராயணன் ஏரிக்கரை ஓரம் ஆடிப்பெருக்கு விழாவை ரசித்த வண்ணம் வருவதாக வந்தியதேவனை அறிமுகப் படுத்தியிருப்பார் அமரர் கல்கி.



ஒவ்வொரு ஆடிப்பெருக்கு அன்றும், ஓடிவரும் காவிரியும்,இழுத்து சென்ற சப்பரமும்(சிறு தேர்), காவிரிக்கரையில் கையில் கட்டிய மஞ்சள் கயிரும், காதோலை(பனை ஓலை) கருகமணியும், புளி சாதத்தில் தொடங்கி, தேங்காய் சாதம், எள் சாதம் என தயிர் சாதத்தில் முடியும் சித்ரான்னங்களும் நினைவுக்கு வராமல் இருக்காது.



அதே நினைவில் ஜானகியின் குயிலோசையுடன் "ஆடி பதினெட்டாம் பெருக்கினைக்" கொண்டாட கீழே உள்ள Play பட்டனை அழுத்துங்கள்.







55. பூனைக்கு மணி கட்டுவது யார்?

பூனையின் திருவிளயாடல்( புத்திசாலிப் பூனை)




"எப்போதும் படம், வீடியோ, பயணம் அப்படின்னு பெரியவங்க ரசிக்கிற மாதிரியே Blog ல பதிவு போட்டுகிட்டு இருக்கிறியே, நாங்களும் கோடைக்கு விடுமுறை 2 மாசம், சமச்சீர் கல்வியா சாதா கல்வியான்னு தெரியாததல புத்தகமில்லம ஒரு மாசமாவும் போர் அடிச்சு கிடக்கிறோமே, நாங்க பொழுது போக்கிற மாதிரி விளையாட்டு எதையாவது பதிவிடக் கூடாதான்னு" கேட்கும் மாணவர்களுக்கான விளையாட்டு பதிவிது.

பூனைக்கு மணி கட்டுவது யார்ன்னு யோசிப்பது இருக்கட்டும் முதலில் பூனையை கட்டத்துக்குள் கட்டுங்கள் பார்ப்போம்.

அது அவ்வளவு லேசுபட்ட வேலையில்ல.இது மிகவும் புத்திசாலிப் பூனை. தந்திரமாக தப்பித்துவிடும். ஆனா முயற்சி செய்தா பூனைய தீகார் ஜெயில்ல புடிச்சி போட்டிடலாம்.

எங்க! கீழே உள்ள கட்டத்த அடைச்சி பூனைய கட்டுங்க பார்க்கலாம்.

உங்களுக்காக கொஞ்ச கட்டத்த அவங்கலே அடைச்சி தர்ராங்க.






54. மழலை மொழி






உலகில் ஆயிரம் மொழிகள் இருந்தாலும் மிக இனிமையான மொழி எது தெரியுமா? சந்தேகமில்லாமல் மழலை மொழிதான்.

அதுமட்டுமல்ல, Encript செய்யப்பட்ட மொழி. அதனை பேசும் குழந்தைக்கும் பெற்றவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ள கூடிய அளவிற்கு கோடிங் செய்யப்பட்டது.

இதோ இங்கே இரண்டு மழலைகள் பேசிக்கொள்ளும் அழகினைப்பாருங்கள்.

நமக்கு "தத்தத" மட்டும்தான் கேட்கிறது. அதனை புரிந்து கொண்டு மற்றய குழந்தை பதில் சொல்வதை கேட்டு ரசியுங்கள்.




Related Posts with Thumbnails