56. ஆடி 18

ஆடி பதினெட்டு




வந்தாரை வாழவைப்பது மட்டும் தமிழரது பண்பாடு அல்ல, வாழ வைத்தாரை வணங்கி நன்றி செலுத்துவதும் கூட நமது மரபு, அது மனிதர்கள் ஆனாலும் சரி, மரங்களானாலும் சரி.

தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத்திற்கு மூல காரணமாகி, விவசாயியையும், நம்மையும் வாழ வைக்கும் கதிரவனுக்கு, தை முதல் தேதியில் வணங்கி நன்றியை தெரிவிக்கிறோம்.ஏர் உழுவது முதல் ஏற்றி வருவது வரை உதவிடும் மாட்டுக்கு, தை இரண்டாம் நாளில் பொங்கல் வைத்து சீராட்டுகிறோம்

பயிர்த்தொழிலுக்கு ஆதாரமான நீருக்கும் அதனை வாரிவழங்கும் நதிக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவே ஆடி பதினெட்டாம் பெருக்கு.


water


"சோறுடைத்த" நாட்டை வளமாகி வரும் காவேரிக் கரை ஓர மக்களின் முக்கிய விழாவாக ஆடிப்பெருக்கு காணப்படுகிறது. காவேரி ஓடாத ஊர்களில் கூட, அங்கே உள்ள ஆறுகளிலும் குளங்களிலும், முக்கியமாக பெண்களால் இவ்விழா கொண்டாடப்படுகிறது.



தமிழ் புதினத்தின் சிகரமான "பொன்னியின் செல்வன்" ஆரம்பிப்பது கூட இதேபோன்ற ஒரு ஆடிப்பெருக்கு விழா அன்றுதான். வீர நாராயணன் ஏரிக்கரை ஓரம் ஆடிப்பெருக்கு விழாவை ரசித்த வண்ணம் வருவதாக வந்தியதேவனை அறிமுகப் படுத்தியிருப்பார் அமரர் கல்கி.



ஒவ்வொரு ஆடிப்பெருக்கு அன்றும், ஓடிவரும் காவிரியும்,இழுத்து சென்ற சப்பரமும்(சிறு தேர்), காவிரிக்கரையில் கையில் கட்டிய மஞ்சள் கயிரும், காதோலை(பனை ஓலை) கருகமணியும், புளி சாதத்தில் தொடங்கி, தேங்காய் சாதம், எள் சாதம் என தயிர் சாதத்தில் முடியும் சித்ரான்னங்களும் நினைவுக்கு வராமல் இருக்காது.



அதே நினைவில் ஜானகியின் குயிலோசையுடன் "ஆடி பதினெட்டாம் பெருக்கினைக்" கொண்டாட கீழே உள்ள Play பட்டனை அழுத்துங்கள்.







55. பூனைக்கு மணி கட்டுவது யார்?

பூனையின் திருவிளயாடல்( புத்திசாலிப் பூனை)




"எப்போதும் படம், வீடியோ, பயணம் அப்படின்னு பெரியவங்க ரசிக்கிற மாதிரியே Blog ல பதிவு போட்டுகிட்டு இருக்கிறியே, நாங்களும் கோடைக்கு விடுமுறை 2 மாசம், சமச்சீர் கல்வியா சாதா கல்வியான்னு தெரியாததல புத்தகமில்லம ஒரு மாசமாவும் போர் அடிச்சு கிடக்கிறோமே, நாங்க பொழுது போக்கிற மாதிரி விளையாட்டு எதையாவது பதிவிடக் கூடாதான்னு" கேட்கும் மாணவர்களுக்கான விளையாட்டு பதிவிது.

பூனைக்கு மணி கட்டுவது யார்ன்னு யோசிப்பது இருக்கட்டும் முதலில் பூனையை கட்டத்துக்குள் கட்டுங்கள் பார்ப்போம்.

அது அவ்வளவு லேசுபட்ட வேலையில்ல.இது மிகவும் புத்திசாலிப் பூனை. தந்திரமாக தப்பித்துவிடும். ஆனா முயற்சி செய்தா பூனைய தீகார் ஜெயில்ல புடிச்சி போட்டிடலாம்.

எங்க! கீழே உள்ள கட்டத்த அடைச்சி பூனைய கட்டுங்க பார்க்கலாம்.

உங்களுக்காக கொஞ்ச கட்டத்த அவங்கலே அடைச்சி தர்ராங்க.






54. மழலை மொழி






உலகில் ஆயிரம் மொழிகள் இருந்தாலும் மிக இனிமையான மொழி எது தெரியுமா? சந்தேகமில்லாமல் மழலை மொழிதான்.

அதுமட்டுமல்ல, Encript செய்யப்பட்ட மொழி. அதனை பேசும் குழந்தைக்கும் பெற்றவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ள கூடிய அளவிற்கு கோடிங் செய்யப்பட்டது.

இதோ இங்கே இரண்டு மழலைகள் பேசிக்கொள்ளும் அழகினைப்பாருங்கள்.

நமக்கு "தத்தத" மட்டும்தான் கேட்கிறது. அதனை புரிந்து கொண்டு மற்றய குழந்தை பதில் சொல்வதை கேட்டு ரசியுங்கள்.




53.நான் அடித்தால் வலிக்கும்.



அகப்பையால் அடித்தால் வலிக்குமா? அதுவும் மரத்தாலான அகப்பை.

"நீ என்னை எத்தனை அடி வேண்டுமானாலும் அடித்துப் பார், எனக்கு வலிக்காது. ஆனால் நான் ஒரு அடி அடித்தாலும் உனக்கு வலிக்கும்." என்று சவவால் விடுகிறார் இவர். சாட்சிக்கு அவரது நண்பர் உண்டு.

எப்படி என்று கேட்கிறீர்களா? Videoவைப் பாருங்கள் புரியும்.

100% சிரிப்பிற்கு நான் உத்திரவாதம்.

வழக்கம் போல முழுவதும் Download ஆகும் வரை Pause செய்து, முழுமையா பாருங்க,

வீடியோ பார்த்த பிறகு "ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாயிற்று, கியரையும் போட்டாயிற்று, ஆனாலும் ஆட்டோ நகர மாட்டேன் என்கிறது" என்று அஜித்திடம் கருணாஸ் புலம்புவது ஞாபகத்துக்கு வரும்


52.பெயரைச் சொன்னால் போதும்



படைப்பாளிகளுக்கு கலா ரசனை கூடும் போது, அதனைப் பார்போரை வியக்க வைக்கிறது. அது அந்தக் கால சிற்பியாக இருந்தாலும் சரி இந்தக் கால சாஃப்ட் வேர் இஞ்சினியர் ஆனாலும் சரி.

FLASH உருவாக்குபவரின் ரசனையை "மெல்ல மெல்லத் தொடலாமா" என்ற பதிவுல உள்ள FLASHல காணலாம்.

இப்போ இங்க அவர்களின் குறும்புத்தனத்தை இந்த FLASHல பார்த்து ரசியுங்கள்.

வழக்கம் போல FLASH முழுவதும் லோடு ஆகும் வரை காத்திருக்கவும். லோடிங் % Status bar ரசித்த பின்பு உங்க பேரை இதில் Type செய்து Enter தட்டி விட்டு காத்திருங்கள்,.

கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகைத் தோன்றும்.





இந்த idea பெற ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

Related Posts with Thumbnails