43.ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்


2009newyear1

Photobucket<

42. நகைச்சுவை புதையல்




இரு நாட்களுக்கு முன்பு வேலை செய்யும் இடத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் பாஸ் முடிந்து விட்டதால், அதனை புதுப்பித்து தறுமாறு சம்பந்தப் பட்ட அலுவலருக்கு மின் அஞ்சல் அனுப்பினேன்.

அதனை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்த அவர் அதனை என்னிடம் நீட்டி, "Really what you want?" என்றார்.

அதனை வாங்கிப் பார்த்தேன்.

சில நாட்களாகவே எனது மடி கணனியின் கீ போர்டில் சிறிய பிரச்சனை.
"P" எழுத்தை அடித்தால் அது தெரிவதிலை. ஒரு முறைக்கு இரு முறையாக, பலத்தை பிறயோகப் படுத்தி அடித்தால் மட்டுமே விழும்

அதனை கவனிக்க தவறியதால், அனுப்பிய மெயில் இப்படி இருந்தது.

“ My ass has exired yesterday. Kindly renew it.”

அசடு வழிவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால் இந்த நிகழ்ச்சியை சொல்வதற்க்காக இல்லை இந்த பதிவு.

இதே போன்ற நிகழ்ச்சியை அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு சிந்தித்து நகைச்சுவையாக அமரர் தேவன் எழுதிய கதை- நகைச்சுவை புதையலை, சிறிது நாட்களுக்கு முன் வலையில் கண்டெடுத்தது நினைவிற்கு வந்தது.

கணனிக்குப் பதில் தட்டச்சு.


வெறும் கடித அஞ்சல் முறையில் எழுதி, என்னமாய் சிரிக்க வைக்கிறார் மனிதர். அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதியதாயிருந்தாலும், இன்றும் படித்து ரசிக்க முடிகிறது.

இதோ அந்த நகைச்சுவை புதையலை நீங்களும் படித்து ரசி(ரி)யுங்கள்!



1

10-1-'43

'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு மாணிக்கம் பிள்ளை எழுதிக் கொண்டது.

அன்பார்ந்த ஐயா,

தங்களிடம் நான் வாங்கிய தமிழ் 'டைப் ரைட்டிங்' மிஷின் வெகு அற்புதமாக உழைக்கிறது. அதைப் பார்க்கிற பேர் யாரும் அது ஸகிண்ட் ஹாண்ட் மிஷின் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நல்ல பண்டத்தைப் பொறுக்கி எடுத்து எனக்கு நீங்கள் விற்றதற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் நண்பர்களுக்கெல்லாம் தங்கள் கடையையே எப்போதும் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறேன்.

தங்கள்,
மாணிக்கம் பிள்ளை

2

14-1-'43

'புராதன விலாஸ்' மமம மானேஜர் அவர்களுக்கு:

அன்பார்ந்த ஐயா,

உங்கள் டைப் ரைட்டிங் மிஷின் இன்னும் மமமம நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் மமம என்ற எழுத்து வரும்மமம போது மமமமட்டும்மமம ஏனோ மமமமறுபடி 'ம' எழுத்து விழுந்து விடுகிறது. உடனே ஒரு ஆளை அனுப்பி ரிப்பேர் செய்யச் சொல்லவும்மமம.

தங்கள்,
மமமமாணிக்கம்மமம பிள்ளை

3

20-1-'43

புரா?ன விலாஸ்? மானே?ருக்கு?

ஐயா?

நீங்கள் அனுப்?ய ஆள் வந்தான்? ரிப்பே?ர் செய்தான்? ஆனால் நான் என்னத்தைச் சொல்?லுவேன்? தலை?லி போய் திரு?வலி வந்தது போல், ஒன்று போய் ஒ?று அல்லவா வ?து விட்டது. நான் டை? அடி?கும்போ? ஏனோ கே?விக்குறிக? விழு?து கழு?தை அறு?கி?றனவே?? த?ர, அது போடு? சத்?ம் காத?ல் கேட்?? முடியவில்லையே? உடனே வேறொரு ந?ல? ஆளாக அனுப்? வை?கவும்? பழைய ஆசா?யை மென்று கேட்?க் கொ?கிறே?

தங்கள் உண்மையுள்ள?
மா?க்கம் ?ள்ளை?


4


23-1-'43

'புராதன விலாஸ் மானேஜரே!'

அன்பார்ந்த ஐயா!

உங் கள்கம் பெனியில்வியா பாரம்வைத்து கொண்ட தற்காகஎன் னை செருப்பால்அ டிக்கலாம். ஆ மாம்! ஒருரி ப்பேர் செய்தா ல்இன்னொரு ரிப்பேர்கா த்திருக்கிறது. வார் த்தைமுடி ந்தால் இட வெளிவி ட்டுக்கொள்ளாதோ? வயி ற்றெரிச்சலைக் கேளுங்கள். தா வித்தா விக்கு திக்கிறதே!

கொஞ்சமும்மன நிம்மதியில்லை. உடனே ஒதுக்கப் பண்ண ஆள் ஜல்திஅ னுப்பவும்.

தங்கள்
மா ணிக்க ம்பி ள்ளை


5

00-00-0000

'புராதன000 மானே 0000

ஐ00

நீங்க00 அனு00ய ஆள் வந்000. அவன் சுத்0 சைபர் என்0தற்கு இது 00 அத்00ட்சி போ00தா? சும்மா0 சும்மா நா0 ரி00ர் ப0ணிக் கொ0டு இருக்க மு0யாது. இ0வே க00சி 00வை. இனியு0 மிஷி0 ஒழு0 காகா விட்டால் நான் உங்கள் கம்பெனி மீது 00000 0000 வேண்டியி0க்0ம் எ0று எ0சரிக்கை 00கிறே0.

மா0000 பி000

6


2-2-'43

'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு:

அன்பார்ந்த ஐயா,

நான் கடிதம் எழுதிய போதெல்லாம் ஆள் அனுப்பி என் மிஷினை ரிப்பேர் செய்தத்தற்கு மிக நன்றியுள்ளவனாகயிருக்கிறேன். இப்போது மிஷின் திருப்திகரமாக 'டைப்' அடிக்கிறது! அபாரம், அருமை, அற்புதம், போங்கள்!

என் நண்பர்களிடம் f f f f f f f f f f f f0 0 0 0 0 0 0 0 0 ** * * * * * 0 0 0 0 0 0 0 0 % % % % % % % f f f f f f f f f f ? / த ? f % உண்மை ???

மாணி f f ம் % ள் ?


பின் குறிப்பு

இந்த* தடி ? ம் அடிக்க ஆர பிரித்* * * * சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கி%றன ? உடனே fரு ஆளை அனுப்பி* * ? ? வைக்fவும்!

------------சுபம்--------------

41. எகிப்து

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலை மனையை வெள்ளையடித்து புதுப்பிக்க நேரம் கிடைத்துள்ளது. இந்த பத்து மாத இடைப்பட்ட நேரத்தில், பலர் "எண்ணச்சுவடி"யை புரட்டிப் பார்த்திருப்பது 'FEEDJET' மூலம் தெரிய வந்திருக்கிறது. அதில் அதிகமானோர் "ஜோதிடம்" என்ற தேடுதல் மூலம் google லால் இழுத்து வரப் பட்டிருக்கிறார்கள். வந்து சென்ற அனைவருக்கும் நன்றி.

நைஜீரியாவில் ஏற்பட்ட சில அசாதாரண சூழலால் இடம் பெயர வேண்டிய நேர்ந்ததால் (நேரம் கிடைத்தாலும் சோம்பேரித்தனம் குறிக்கீட்டால்) வலையை தொடர முடியாத நிலை. மீண்டும் பணி "எகிப்த்தில்" தொடர்வதால், சுவடியை தூசி தட்ட ஆரம்பித்தாகி விட்டது.


"எகிப்த்தில்" பணி என்றதும், புறப்படும் முன்பு பலரும் பலவித எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள்.

"Egypt ல் பிரமிட் பார்க்கப் போனா, அங்கேயிருந்து கிரிஸ்டல்ல பிரமிட் ஒன்னு வாங்கிகிட்டு வாங்கப்பா" என்று மகனின் கோரிக்கை

“'சூயஸ்' கால்வாயில் boating எல்லாம் இருக்காமே, வோவீங்களா?" என்று மனைவின் ஆதங்கம்.

"Cairo வில் famous பெல்லி டான்ஸ்தான், அத பாக்காம வந்திடாதே" என்று நண்பனின் advise.

இங்கு ஏற்பட்ட அனுபங்கள் என்று எழுதி போரடிக்காமல் சும்மா "படம்" காட்டலாமே.

முதலில் என்ன படம் காட்டலாம்? நண்பரின் ஆசையை நிறைவேற்றவும், கிளுகிளுப்பாக ஆரம்பிக்கவும் பெல்லி டான்ஸிலிருந்து தொடங்குவோம்.

சிம்ரனின் Hip dance பார்த்திருக்கிறோம். இந்தப் பெண்மணியின் Hip plus belly dance பார்த்து Enjoy நண்பர்களே!

(குறிப்பு:- இது வலைதளங்களில் இருந்து தேடி கண்டுபிடித்து இறக்குமதி செய்தது என்பதினை அறியவும்.)



40. போகிப் பண்டிகை

நமக்கு தேவை இல்லாதவற்றையும் பயன் படாதவைகளையும் போகியின் போது வீட்டில் இருந்து அப்புற படுத்துவது வழக்கம்.
'சாமி' திரைப் படத்தில் விவேக் நகைச்சுவைக்காக செய்த காட்சியை நடைமுறையில் செய்து போகி கொண்டாடி இருக்கிறார் ஒருவர் இன்றய தினமலர் செய்தியில்.


செத்துப்போனது மனித நேயம் :குப்பை தொட்டியில் முதியவர் வீச்சு




சிவகாசி: உழைக்கத் திராணியற்ற முதியவரை குப்பைத் தொட்டியில் வீசி மனித நேயத்தை வளர்க்கும் செயல் சிவகாசியில் நடந்துள்ளது. "பாசமுள்ள' மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி மருதநாடார் ஊரணி பகுதியில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். பழைய துணியால் சுற்றப்பட்ட பொருட்கள் மூட்டைகளாக கிடந்தன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் அகற்ற முயன்ற போது சந்தேகம் அடைந்தனர். மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 60 வயதுள்ள முதியவர் சுயநினைவின்றி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள், முதியவரை மரத்தடிக்கு துõக்கி வந்தனர். தண்ணீர், டீ கொடுத்து ஆசுவாசப்படுத்தி நினைவு தெளிய வைத்தனர். அவர் மிகவும் சோர்ந்து கிடந்தார். அவரிடம் இருந்து தகவல் பெற முடியாததால், முதியவரை பற்றி தெருத்தெருவாக விசாரித்தனர். அப்போது சில தகவல்கள் கிடைத்தன. முதியவர் பெயர் பாண்டி. சிவகாசி பி.கே.எஸ். ஆறுமுகநாடார் தெருவை சேர்ந்தவர். அச்சுத் தொழிலாளியாக பணியாற்றியவர். மனைவி மல்லிகா பல ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். அச்சகத்தில் வேலை செய்த மகன் செல்வகுமார் பராமரிப்பில் இருந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டவரை கவனிப்பாரில்லை. பசியால் அவதிப்பட்டார். குறைந்த வருவாயில் குடும்பம் நடத்திய மகனால் தந்தையை பராமரிக்க இயலவில்லை. எனவே தந்தையைக் கண்டு கொள்ளவில்லை. கிடைத்ததை சாப்பிட்டு தெருவோரத்தில் நாட்களை கடத்தி வந்தார் பாண்டி.ஒரு வீட்டு வாசலில் படுத்துக் கிடந்தவரை வீட்டு உரிமையாளர், இறந்தால் தொந்தரவு என கருதி குப்பை தொட்டியில் வீசியிருக்கலாம் என தெரியவந்தது.இந்த தகவல் அறிந்து, சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், பணியாளர் உதவியுடன் முதியவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மகனை அழைத்து வந்து முதியவரை பராமரிக்க முயற்சி செய்தனர். மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. பெற்றோரை பராமரிக்க தவறும் மகன்களுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றியும் இதுபோன்ற மனிதநேயமற்ற சம்பவங்கள் தொடர்வது வேதனையான விஷயம்தான்.

நன்றி தினமலர்

Related Posts with Thumbnails