39. புத்தாண்டு வாழ்த்துக்கள்

Photobucket

Photobucket

Photobucket

Photobucket



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

38.தீபாவளி வாழ்த்து

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்


Photo Sharing and Video Hosting at Photobucket



Photo Sharing and Video Hosting at Photobucket

37. மீண்டும் ஒரு புத்திசாலி திருட்டு


புத்திசாலி திருட்டை பத்திய செய்தி படித்து இரண்டு நாள் கூட ஆகல இதோ மீண்டும் ஒன்று. ரூம் போட்டு யோசிப்பாங்களோ???

சேலத்தில் எலக்ட்ரிகல் சாதனங்கள் விற்பனை டீலராக இருப்பவர் ஆறுமுகம். சில மாதத்துக்கு முன் வாடிக்கையாளராக அறிமுகமானார் ஒரு "டிப்டாப்' ஆசாமி. 35 வயதுள்ள அவர் தன்னை வினோத்குமார் என்றும், பெரிய பிசினஸ் மேன் எனவும் கூறினார். அதற்கேற்ப விலையுயர்ந்த கேமரா மொபைல் போன் மற்றும் வாட்ச், பிரேஸ்லெட் அணிந்திருந்தார்.ஒரு நாள் ஆறுமுகத்திடம் சற்றே பதட்டத்துடன் வந்த வினோத்குமார், "சார்... என்னோட ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருந்த பர்ஸ் தொலைந்து விட்டது. அதற்காக விண்ணப்பித்துள்ளேன். எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனது நண்பர்கள் மதுரையில் இருந்து பணம் கொடுக்கவும் தயாராக உள்ளனர். நீங்கள் சம்மதித்தால், உங்களது வங்கிக் கணக்கில் அவர்கள் பணத்தை கட்டிவிடுவர். அந்த பணத்தை எடுத்து என்னிடம் கொடுக்க முடியுமா?' என மிகுந்த பணிவோடு கேட்டார்.

ஆறுமுகமும் தனது வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்தார்.

ஒரே வாரத்தில் மூன்று முறை தலா ரூ.80 ஆயிரம் வீதம் மதுரையில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பணம் கட்டப்பட்டது. அவற்றை அவ்வப்போது வந்து வினோத் வாங்கிச் சென்றார்.

மீண்டும் ஆறுமுகத்திடம் வந்த வினோத், "சார்... எனது மனைவி சிங்கப்பூரில் இருந்து திரும்பி வருகிறார். உங்களுக்கு ஏதேனும் தேவையாக இருந்தால் அவற்றை வாங்கி வரச்சொல்கிறேன்' என்றார்.அதை நம்பிய ஆறுமுகமும், சிங்கப்பூரில் நகைகள் விலை குறைவாக இருக்கும் எனக்கருதி, ரூ. 50 ஆயிரத்துக்கு நகைகள் வாங்கிவர சொன்னார்.

அதற்கான பணத்தை வினோத்குமாரின் மனைவியின் வங்கி கணக்கு எண் என கொடுக்கப்பட்ட எண்ணில் செலுத்தினார். அதன்பின் வினோத் கடை பக்கமே வருவதில்லை. அவரது மொபைல் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

இத்துடன் மதுரையில் இருந்து ஆறுமுகத்தை தேடி போலீசார் வந்தனர். மதுரையில் வேலையில்லாத இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் கட்ட கூறியதாகவும், அதன்படி மூன்று இளைஞர்கள் தலா ரூ.80 ஆயிரத்தை சேலத்தில் உள்ள ஆறுமுகத்தின் வங்கிக் கணக்கில் கட்டியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் தானும் ஏமாற்றப்பட்ட கதையை போலீசாரிடம் விளக்கினார்.

வினோத்தின் மனைவியின் வங்கிக்கணக்கை ஆராய்ந்தபோது, திருப்பூரில் இதே பாணியில் வேறொருவர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த மோசடியில் தமிழகம் முழுவதும் பலரும் ஈடுபட்டிருப்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி: தினமலர் 22/10/07

36. நூதன கொள்ளை


குடந்தை கடையில்

40 பவுன் நகை நூதன கொள்ளை

சகஜமாக பேசி கைவரிசை பலே ஆசாமி துணிகரம்.



கும்பகோணம், அக். 18: கும்பகோணத்தில் நகை கடையில் நூதன முறையில் 40 பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலஅய்யன் தெருவில் வசிப்பவர் பிச்சை (60). இவர் டிஎஸ்ஆர் பெரிய தெரு வில் நகை கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு நேற்று முன்தினம¢ மாலை மாருதி காரில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். பெரிய மனிதர் போன்று தோற்றமளித்த அவர் மகள் திருமணத்துக்கு நகைகள் வேண்டும் என கேட்டுள்ளார். ஊழியர்களை சுண்டி இழுக்கும் வகையில் சகஜமாக பேசினர்.


154 கிராமில் 5 தங்க செயின், 116 கிராமில் 3 நெக்லஸ், 80 கிராமில் 4 ஜோடி தங்க வளையல், ஒரு ஜோடி வைரத்தோடு, இரண்டு நவரத்தின மோதிரம் என ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகைகளை ஊழியர்கள் எடுத்து காட்டியுள்ளனர். நகைகளை பார்த்த அந்த நபர், எனது மனைவியிடம் காட்ட வேண்டும் எனக்கூறினார். அந்த நகைகளுடன் கடை உரிமையாளர் பிச்சையை காரில் அழைத்துக்கொண்டு குடந்தை மருதமுத்து நகருக்கு வந்தார்.


அங்கு ஒரு வீட்டுக்கு முன் காரை நிறுத்தி விட்டு அந்த நபர் உள்ளே சென்றார். நகை கடை அதிபர் பிச்சை வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். நீண்ட நேரமாகியும் நகைகளுடன் சென்றவர் வராததால் பிச்சை வீட்டிற்குள் சென்று விசாரித்தார். அங்கிருந்த ஒரு பெண், வந்தவர் பின்வாசல் வழியாக சென்று விட்ட தாக கூறினார். உடனே வெளியில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரையும் காணவில்லை. இது குறித்து பிச்சை கும்பகோ ணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.


இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நகைகளுடன் மாயமானவர் வந்த கார் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமானது. அவரிடம் குடந் தை செல்ல வேண்டும் என காரை வாடகைக்கு பேசி எடுத்துச் சென்று உள்ளார். நகைகடையில் கைவரிசை காட்டி விட்டு மீண்டும் தஞ்சைக்கு வந்துள்ளார். தஞ்சை வந்ததும், கிருஷ்ணமூர்த்தியின் செல்போனை வாங்கிக்கொண்டு டவர் கிடைக்கவில்லை என்று ஒரு சந்தில் சென்ற அந்த நபர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி தஞ்சையில் போலீசாரிடம் புகார் அளித்தார்.


இது பற்றி தெரிந்ததும், போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கும்பகோணம் அழைத்து சென்று விசாரித்தனர். நகைகள் மற்றும் செல்போனுடன் சென்ற நபர், குடந்தையில் வீடு வாங்க வேண்டும் என கூறி அழைத்து வந்தார். மருதமுத்து நகரில் ஒரு வீட்டை பார்த்தோம். ரூ.16 லட்சத்துக்கு விலை பேசினார். மாலையில் வாஸ்து நிபுணருடன் வருவதாக கூறி விட்டு கிளம்பியவர் நேராக நகை கடைக்கு சென்று கைவரிசை காட்டி விட்டு மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று பின்வாசல் வழியாக தப்பி வந்து காரில் ஏறினார். நகை கடை அதிபரை வாஸ்து நிபுணர் என அந்த வீட்டில் தெரிவித்தார். தஞ்சை வந்ததும் காருக்கு வாடகை தராமல் எனது செல்போனையும் கொ ண்டு சென்று விட்டார் என கார் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் தெரிவித்தார். நகைகளுடன் சென்ற நபரின் புகைப்படத்தை கணினி யில் வரையும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த நபரை பிடிக்க கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


பெரிய மனிதர் தோரணை. எளிதாக பிறர் தன்னை நம்பிவிடும் வகையில் கனிவான பேச்சு. இதுதான் அந்த பலே ஆசாமியின் மூலதனம். இதை வைத்தே வாடகை கொடுக்காமல் கார் டிரைவரை ஏமாற்றியதுடன், அவரது செல்போனையும் உரிமையுடன் கேட்டு வாங்கி எடுத்துச் சென்றுள்ளார். நகைகளை கொள்ளையடிக்கும் முன் வீடு, வாஸ்து, மனைவி என்று ஒரு நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார். கத்தியின்றி, ரத்தமின்றி, கடையின் பூட்டை கூட உடைக்காமல் உரிமையாளரிடமே உரிமையுடன் கேட்டு வாங்கி அந்த நபர் நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
நன்றி
தினகரன்
18/10/07

35.பாம்பின் Lunch Time

முட்டை சாப்பிடும் பாம்பு

ஒருவர் சாப்பிடும் போது சும்மா நின்னு வேடிக்கை பார்க்ககூடாதுன்னு சொல்வாங்க. ஆனா இந்த பாம்பு முட்டை சாப்பிடறத பார்க்கும் போது ஆச்சர்யப் படாம இருக்க முடியலிங்க.அதனுடைய கீழ் தாடை எந்த அளவிற்கு எலஸ்டிக் தன்மையோட இருக்குன்னு நீங்களும் பார்த்து வியப்படையுங்க.




வழக்கம் போல முழுவதும் Download ஆகும் வரை Pass செய்து, முழுமையா பாருங்க

34.தலை எழுத்து

நான் விதி அப்படிங்கற தலைஎழுத்தை சொல்லவரவில்லை. எழுத்தாலான தலையைப் பற்றி சொலலவந்தேன்.

கீழே உள்ள படங்களின் முக"வரி", இல்லை இல்லை முக"வார்த்தை"யை கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்.

ஒரு சிறிய குறிப்பு: ஒவ்வொரு முகமும்
இரண்டிரண்டு ஆங்கில வார்தைகளைக் கொண்டு வரையப்பட்டவை.

முக"வரி"யை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கால்"அடி"யில் பார்க்கவும்.






கால்"அடி"








1. Peace ------ War

2. Threat ------ Pretext

3. Tirany(It must be tyranny, but its acceptable) ------ Freedom

4. Dead ----- Alive

33-இந்தியா 60

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்


Photo Sharing and Video Hosting at Photobucket

32.இந்தியா 60

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்


Photo Sharing and Video Hosting at Photobucket

31.துருவங்கள்.

இன்றய தினகரன் பேப்பரில் மருத்துவர்களை பற்றி வந்த இருவேறு செய்திகள்.

செய்தி 1: பேருக்கும் புகழுக்கும் ஒரு உயிரை துச்சமாக மதித்தல்.


சிறுவன் சிசேரியன் செய்ததால் மனைவியின் உடல்நிலை பாதிப்பு
கணவர் பரபரப்பு புகார்

திண்டுக்கல், ஜூன் 28:

மணப்பாறை டாக்டர் தம்பதியின் மகன் திலீபன்ராஜ், சிசேரியன் செய்ததால், மனைவிக்கு உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதாக, அவருடைய கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் பணிபுரியும் முகமது சாலிக் இதுபற்றி கூறியதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் மணப்பாறை டாக்டர் முருகேசன் மருத்துவமனையில் என் மனைவியை பிரசவத் துக்காக சேர்த்தோம். சிசேரியனில் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் மட்டுமே உயிருடன் இருந்த அந்த குழந்தை இறந்துவிட்டது. அதன்பின் என் மனைவியை வீட்டிற்கு அனுப்பினர். அங்கு என் மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனே டாக்டர் முருகேசனிடம் அழைத்துச்சென்று பரிசோதித்தேன். மாத்திரை கொடுத்து அனுப்பினர். ஆனால் தொடர்ந்து ரத்தப்போக்கு நிற்காததால், திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளேன்.
திலீபன்ராஜ்தான் என் மனைவிக்கு சிசேரியன் செய்திருப்பார் என சந்தேகிக்கிறேன். டாக்டர் வெளியிட்ட படத்தில் காணப்படும் ஆண் குழந்தை எனது குழந்தையே. என் மனைவி குணமானதும் இதுகுறித்து போலீசில் புகார் செய்ய உள்ளேன்.


செய்தி 2: ஒரு உயிருக்காக பேரையும் புகழையும் துச்சமாக மதித்தல்


கவனக்குறைவான சிகிச்சையால் பெண் மரணம்
என்னை கைது செய்யுங்கள் போலீசிடம் டாக்டர் கோரிக்கை

கொல்கத்தா, ஜூன் 28:

நோயாளி மரணத்துக்கு எனது கவனக்குறைவுதான் காரணம்; என்னை கைது செய்யுங்கள் என்று போலீசில் மன்றாடுகிறார் ஒரு டாக்டர்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது சோனாப்பூர். அங்கு டாக்டர் பி.கே. நாஸ்கர் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அதில் கருக் கலைப்பு செய்துகொள்ள பிரபாத்தி பத்ரா என்ற பெண் வந்தார். ஜூன் 18ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாஸ்கர் அவரது கருவைக் கலைக்க அறுவை சிகிச்சை செய்தார். அதைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மூன்று நாடகள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அந்தப் பெண் இறந்துவிட்டார். அதுவரை எந்த நோயாளியும் அவரது மருத்துவமனையில் மரணம் அடைந்ததில்லை. எனவே டாக்டரின் மனதை இந்த மரணம் உறுத்திக் கொண்டே இருந்தது.

அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நேரத்தில் இருந்து கருக் கலைப்பு அறுவை சிகிச்சை செய்தது வரை நடந்த நிகழ்ச்சிகளை திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தார். அறுவை சிகிச்சை செய்தபோது இடுக்கி போன்ற மருத்துவக் கருவியால் அந்தப் பெண்ணின் கருப்பையில் துவாரங்கள் ஏற்பட்டு, அது சில சிக்கல்களை உருவாக்கிவிட்டது என்று டாக்டர் உணர்ந்தார். அதுவே நோயாளியின் மரணத்தில் முடிந்திருக்கிறது என்று அவர் நம்பினார். தன்னுடைய கவனக்குறைவான சிகிச்சையால் ஒரு உயிர் பலியாகிவிட்டதே என்று நினைத்து நினைத்து மனம் ஒடிந்துபோனார்.

போலீஸ் நிலையம் சென்று விஷயத்தைக் கூறி தன்னை கைது செய்து வழக்கு போடுமாறு வேண்டினார். போலீசார் திகைத்துப் போனார்கள். மருத்துவமனை தவறுகள் மறைக்கப்படுவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம், நீங்கள் மகாத்மா காந்தி மாதிரி உங்கள் தவறை வெளிப்படையாகக்கூறி தண்டனையும் கேட்கிறீர்களே.. என்று ஆச்சரியத்துடன் விசாரித்தனர். அவரை கைது செய்யவில்லை. 'நோயாளி தரப்பில் யாரும் புகார் தரவில்லை. இந்த விவரத்தை மருத்துவ வாரியத்துக்கு அனுப்புவோம். அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும்' என்று போலீஸ் சூப்பிரண்ட் குப்தா கூறிவிட்டார்.

'டாக்டர் நாஸ்கர் நல்லவர். அவர் மீது புகார் கொடுக்க மாட்டோம்' என்று அப்பெண்ணின் உறவினர்கள் கூறினர். போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் டாக்டர் சோகமாக இருக்கிறார். தவறு செய்தவன் தணடனை அனுபவித்தே தீர வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார். "தற்கொலை செய்து கொள்வாரோ என்று பயமாக இருக்கிறது. போலீஸ் தலையிட்டால் நல்லது" என்று மருத்துவமனை ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்.

30.பின்னல்

பெண்கள் தங்களது ஜடையை பல விதமாகப் பின்னி, ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

ஆண்கள் என்ன செய்வது?

அட்லீஸ்ட் ஷூ லேஸையாவது பல மாடல்களில் பின்னி அணிந்து கொள்வதற்காக பல டிசைன்கள் இதோ!
















29.வெள்ளி மாலையும் திங்கள் காலையும்

தலைப்பே போதும் விளக்கம் எதுவும் தேவை இல்லைன்னு நினைக்கிறேன்.
Streaming ஆரம்பிச்சவுடன் Pass செய்து முழுவதும் Download ஆன பின்பு பார்த்தா ரசிக்கலாம்




வீடியோவை download செய்து பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

28.நைஜீரியா ஹைஜாக்






20,ஞாயிறு, மே 2007
வைகாசி 06

போர்ட் ஹார்கோர்ட் (நைஜீரியா): நைஜீரியாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் மூன்று இந்தியர்களை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

இது குறித்து நைஜீரிய ராணுவத்தினர் கூறியதாவது:
நைஜீரியாவில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இன்ட்ரோமா என்ற ரசாயன பெட்ரோல் தொழிற்சாலை உள்ளது. இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புக்கு, பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்தனர்.

குடியிருப்பு வளாக முன்பக்க கதவை கண்ணி வெடி மூலம் தகர்த்த பயங்கரவாதிகள், ஊழியர்கள் குடியிருந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு, இந்தியாவைச் சேர்ந்த 10 ஊழியர்களை அதிரடியாகக் கடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த ராணுவத்தினர், உடனடியாக அப்பகுதிக்கு வந்தனர். பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், கடத்தப்பட்டவர்களில் ஏழு பேரை காப்பாற்றினர். மற்ற மூன்று பேரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.

துப்பாக்கிச் சண்டை நடந்த போது, வாகன ஓட்டுனர் ஒருவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடத்தப்பட்ட 3 பேரும் இந்தியர்கள் ஆவர்.இவ்வாறு நைஜீரிய ராணுவத்தினர் கூறினர்.

பெட்ரோல் உற்பத்தியில் உலக நாடுகள் நம்பியிருக்கும் நைஜீரியாவில், ஏராளமான வெளிநாட்டவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை பயங்கரவாதிகளும், கிரிமினல்களும் அடிக்கடி கடத்திச் செல்வது அங்கு வாடிக்கையாகி விட்டது. இந்த ஆண்டு இதுவரை 100கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். பெரும் தொகையை கேட்கும் கடத்தல்காரர்கள், பணம் கிடைத்ததும் பிணைக் கைதிகளை விடுவித்து விடுகின்றனர். தற்போது 12 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர்





Update

போர்ட் ஹார்கோர்ட் (நைஜீரியா): நைஜீரியா எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 3 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையடுத்து தீவிரவாதிகளுடன் நைஜீரியா அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடத்தப்பட்டவர்களில் 2 பேர்தான் இந்தியர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

27.Sleeping Beauty

தூங்கிக் கொண்டு இருப்பவரை உற்றுப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.ஆனால் இப்படி ஆனந்தமாக, கிடைத்த இடத்தை மொத்தையாக்கி உறங்கிக்கொண்டிருக்கும் இந்த Sleeping beautyயை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.













வேறு Beautyயை நினைத்து வந்தவர்கள் ஏமாந்து போகமலிருக்க இந்தப் படம்


மேலும் Sleeping Beauties காண

26.மெய்ப் பொருள் காண்பது அறிவு- 4

பணம் இல்லாத காரணத்தால் பிரச்சனையில் இருப்பவ‌ர்களும், தோல்வியைத் தழுவியவ‌ர்க‌ளும் சலித்துக் கொண்டு சொல்லும் பழமொழி,"பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே." பணம் படைத்தவ‌ர்களுக்கு முதல் ம‌ரியாதை தந்து, நல்ல குணம் படைத்தவ‌ர்களை அவம‌ரியாதை செய்யும் 'பண'நாயக ஆட்சி நடக்கும் இக்காலத்தில் அப் பழமொழியின் நேரடி அர்த்தத்தை ஏற்றுக் கொள்ளலாம்.




நாடி வந்தவ‌ர் ஆண்டியாயினும், அவ‌ர் வாடி விடாமல் இருக்க, கட‌ன் வாங்கியாவது வடித்துக்கொடுக்கும் விருந்தோம்பலில் முதலிடம் வகித்த பழந்தமிழகத்தில் இப்பழமொழி வேறு அர்த்தத்தில் வழங்கி இருக்கலாமில்லையா?

ஒரு நடுத்த‌ர‌ குடும்பம் என்றால் அவ‌ர்க‌ளது சைவ‌ விருந்து வடை பாயாச‌த்துடன் முடிந்துவிடும்.

சற்று வ‌ச‌தியான குடும்பம் என்றால் வ‌ழ‌க்க‌மான் ஐட்ட‌ங்க‌ளுடன், ஐஸ்கிரீம், சூப், ப‌ழம் என்று எக்ஷ்ட்ரா‌ ஐட்ட‌ங்கள் காணும்.

அதுவே வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளது விருந்தானால் எண்ண முடியாத‌ அள‌விற்கு மெனு இருக்கும். பஃபே யில் எதைவேண்டுமான‌லும் எடுத்து சாப்பிட‌லாம்.

எனவே ஒருவர் வீட்டு ப‌ந்தியை(விருந்தை)ப் பார்த்தே அவ‌ர்க‌ளின் வ‌ச‌தியை ம‌திப்பிட‌லாம்.

ஏழை அவ‌னுக்கேற்ற‌ எள்ளுருண்டையை ப‌ந்தியிலே வை‌க்கிறான்.

இருக்கிற‌வன் இலையிலே வ‌ச‌தியைக் காட்டுகிறான்.

எனவே ஒருவ‌னது வ‌ச‌தியை (ப‌ணம்) விருந்திலே காண‌லாம் என்ப‌தையே ப‌ணம் ப‌ந்தியிலே (காண‌லாம்) என்று சொல்லியிருக்க வேண்டும்.

அப்ப‌டியானால் குப்பையிலே போயா குண‌த்தைத் தேட முடியும்?
பணத்திற்காக குண‌த்தை தூக்கி குப்பையிலே போடு என்ப‌துதான் ச‌ரியாக‌ இருக்குமா?

நண்பர் ஒருவ‌ரது திரும‌ணம் திருச்சியில் ந‌ட‌ந்தது. நான் முதல் நாளே சென்றிருந்தேன்( ப‌ந்திக்கு முந்த‌தான்). அவரது அலுவ‌ல‌க‌ நண்பர்க‌ளும் சென்னையிலிருந்து முதல் நாளே வ‌ந்திருந்த‌னர்.

அன்று பகல் முழுவ‌தும் ஊரைச் சுற்றிக்காட்ட, என் ந‌ண்பன் அவ‌ர‌து தூர‌த்து உற‌வினர் ஒருவரை அழைத்து, "மாமா! இவ‌ங்கள த‌னியா அனுப்பினா போற‌ எட‌ம்லா பிர‌ச்சனை ப‌ண்ணிட்டு வ‌ந்துடுவானுங்க. அப்றம் ந‌ம்மப் பேரு கெட்டுப் போயிடும். அத‌னால‌ அவ‌ங்க கூட‌ ஊரை சுத்திக் காட்ற சாக்குல நீங்கப் போயிட்டு வாங்க" என்றான்.

அவ‌ரும் திருமண வேலையெல்லாம் அம்போன்னு விட்டுட்டு வாலிபக் கூட்ட‌த்தோட‌ ஐக்கிய‌மாக்கிக் கொண்டார்.

அன்று இரவு "எங்கேல்லாம் போனிங்க?" என்று அவரை விசாரித்தேன்.என்னப்பா, friends ப்ப‌த்தி இப்படி சொல்லிட்டான். எல்லாம் ந‌ல்லப் ப‌ச‌ங்க‌ப்பா. முக்கொம்பு போவ‌லான்னா, கோயிலுக்கு கூட்டிப் போகச் சொன்னாங்க‌ப்பா. அப்றம் ம‌லைக்கோட்டை, ஸ்ரீர‌ங்கம், வ‌ய‌லூர்னு சுத்திட்டு வ‌ர்றோம்" என்றார்.

பெருசுகள் சீட்டுக் க‌ச்சேரியைத் துவ‌ங்க, இள‌சுகள் பாட்டில் க‌ச்சேரியை ஆர‌ம்பித்த‌னர். நண்ப‌ர்கள் அனைவ‌ரும் வ‌ட்டம் க‌ட்டி தரையில் உட்கார்ந்திருக்க‌,ஒருவர் ம‌ட்டும் நாற்காலிப் போட்டு ஓர‌மாக‌ அம‌ர்ந்திருந்தார். அவர் கையில் fanta பாட்டில்!. நானும் மாமாவும் அந்த‌ அறையைக் க‌ட‌க்கும் போது இக்காட்சியைக் க‌ண்டோம்.

நான் வ‌லியச் சென்று, "ஏன். அவரு பார்ட்டியில க‌ல‌ந்துக்க‌லயா? இன்னைக்கு விர‌த‌மா" என்றேன் கேலியாக‌.

"யாரு, சுரேஷா?, அவ‌ன் pant ப்போட்ட சாமியாருங்க. எங்க gangல சேர்ந்து வ‌ந்திர்க்கிறதே அதிச‌ய‌ங்க" என்றார் பாட்டில் ப‌ங்கீட்டாளர்.

"இன்னைக்கு ஒரு நாள் பார்டியில‌வாவது, 'friend டோட சுத‌ந்திரம்' ப‌ரிபோறத நினைச்சி க‌ல‌ந்துக்க‌லாம்ல" என்றேன்.

"அட நீங்க‌ ஒண்ணு, வரும்போது பாண்டி(புதுச்சேரி) வந்துட்டு வந்தோம், அங்க 'அந்தக் கடல்லயே' காலநனைக்காம வந்தவன், இந்த 'காவேரி தீர்த்தத்ல'யா குளிக்கப் போறான்" என்றார் அவர் ந‌ண்பர்.

"சரி! சரி! அவரு ந‌ல்லவராவே இருந்துட்டுப் போகட்டும். அவர compel பண்னாதீங்க‌" என்று சொல்லி திரும்பி நடந்தேன்.

அவ‌ர்கள் பேச்சின் அர்த்தம் புரியாம‌ல் என்னை 'ஙே' என்று பார்த்தார் மாமா.
"என்ன சொல்றாங்க‌, குளிச்ச‌ப்ப‌ற‌மாதன் பீர் குடிப்பாராமா?" என்றார் அப்பாவியாக‌.வந்த சிரிப்பை அட‌க்கிக் கொண்டு அவ‌ர்க‌ளின் பேச்சில் இருந்த 'உள்குத்தை" புரிய வைத்தேன்.

மறுநாள் திரும‌ணம் முடிந்து அனைவ‌ரும் புற‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தனர். நண்பர் குழாம் காலையிலேயே இடத்தை காலி செய்துவிட்டிருந்தது.நானும் விடைபெற புது மாப்பிள்ளையிடம் சென்ற போது, அவனது மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
"என்ன சொல்றார் மாமா?" என்றேன்.
அதற்கு அவரே என்னிடம்" அது ஒண்ணுமில்ல தப்பி! இவனோட friend சுரேஷ் இருக்கன் பாரு அவனைப் பத்தி விசாரிச்சிட்டு இருக்கேன்.
என் அண்ணன் பொண்ணு படிச்சுட்டு கல்யாணத்துக்கு காத்திகிட்டு இருக்கா. அதுதான் தோதுபட்டு வருமான்னு பார்க்கிறேன்"

"என்ன மாமா! பாத்த ஒரு நாள்ளவே அவரு நல்லவருன்னு முடிவு பண்ணிட்டீங்களா?" இது நான்
"பார்டா, நான் கூட குடிக்க மாட்டேன்னு நல்லாத்தெரியும். மாமா அந்தப்பொண்ண எனக்கு கொடுக்க நினைச்சாராப் பாரு" என்றான் நண்பன்.
"அத இனி யோசிச்சு என்ன பண்றது. உன் தலைவிதியத்தான் முடிவு பண்ணியாச்சே காலையிலேயே" கிண்டலடித்தேன் நான்.

உடனே மாமா விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்,"இல்ல மாப்ள! நீங்க குடிக்கிலங்கிறது வேற.மெட்றாஸ்ல சித்தப்பா வீட்ல இருந்துகிட்டு வேலைக்குப் போயிட்டு வர்ரீங்க.வேலை முடிஞ்சு வரவே நைட்டாயிடுது.வெளிய சுத்த நேரமே இல்ல. உங்களுக்கு இதுபோல ஒரு சான்ஸ் வந்தா எப்படி நடந்துப்பிங்கன்னு எங்களுக்கு தெரியாதில்ல.
குடிக்காதவங்க மத்தியில இருந்துகிட்டு குடிக்காம இருக்கிறது பெருசு இல்ல.
நேத்தி அந்தப் பையன கட்டுப் படுத்த யாருமில்ல. போதாதுக்கு friends வேற கம்பல் பண்றாங்க, அப்படியும் குடிக்கலன்னா, எப்பவும் குடிக்க மனசு வராது தம்பி."

"அது எப்படி மாமா இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க?"

"தம்பி! என் மாப்ள நல்லவனா இருக்கலாம்.ஆனா அவன எப்போவும் நல்ல பசங்கக்கூடயே (this include me also!) பார்க்கறததால அவனோட உண்மையான குணம் தெரியல, ஆனா குப்பைக்கு மத்தியில மாணிக்கம் ஜொலிகிறதப் போல குடிக்கிறவங்க மத்தியில அந்தப்பையனோட குணம் பளிச்சுன்னு தெரிஞ்சுது.
சிலப்பதிகாரத்துல கற்புக்கரசி கண்ணகிக்கு ஈடா மாதவிய ஏன் பேசறாங்கன்னா, அவ பரத்தை குலத்துல பிறந்தும் ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ்ந்தா.
அவ நினைச்சா யார் கூட வேணாலும் போயிருக்க முடியும். அவளுக்கு அப்படி ஒரு சுதந்தரத்த சமூகம் கொடுத்து இருந்தது. ஆனா அவ போகல. அங்கதான் அவளோட குணம் நிக்குது. தப்பு பண்ண சந்தர்ப்பம் இருக்கும் பரத்தை குலம்ங்கிற குப்பைகளுக்கு நடுவே இருந்தும் தப்பு பண்ணாததால ஜொலிச்சா" என்று பெரிய லெக்சர் அடித்தார் மாமா.

நண்பன் மிரண்டுப் போய் எங்களைப் பார்க்க, நானும் என் பங்குக்கு
"ஆமாம் மாமா, வெள்ளைப் பேப்பர்ல வெள்ளை sketchசால எழுதினா சரியாத் தெரியாது, கருப்புப் பேப்பர்ல வெள்ளை sketchசால புள்ளி வச்சாலே பளிச்சுன்னுத் தெரியும். அதுமாதிரி Backgroundதான் படத்த எடுப்பா காண்பிக்கும்னு சொல்றீங்க" என்று தத்துவத்தை எடுத்து விட்டேன்.

நண்பன், அப்போ குப்பையிலதான் குணத்த தேடுனும்னு சொல்றீங்க?" என்று கேட்டான்.

"இல்ல, இல்ல, குப்பையிலதான் குணம் பளிச்சுன்னு தெரியும்ங்கிறேன்" மாமா விளக்கம் கொடுத்தார்.

அப்போதுதான் இந்த பழமொழி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
குணத்தை குப்பையிலே போட சொல்லியிருக்க மாட்டாங்க, குப்பையில பளிச்சுன்னுத் தெரியும்னு சொல்லிருருப்பாங்கன்னு தோணிச்சு.

ஆக இந்தப் பழமொழியை , பணம் (செல்வாக்கு)பந்தியில் தெரியும், குணம் குப்பையில் (தப்பு பண்ணும் வாய்ப்புகளுக்கிடையே) தெரியும் அப்படிங்கிற பொருளில் கூட சொல்லியிருக்கலாமில்லையா?



பின் குறிப்பு: மாமா சென்றவுடன் நண்பனிடம் நான் ஒரு சந்தேகம் கேட்டேன்,"ஏண்டா? உங்க மாமா வீட்ல கல்யாணத்துக்கு தயாரா ஒரு பொண்ணு இருக்குன்னு friends கிட்ட முன்னாடி எப்பவாது சொல்லிருந்தியா?"

Related Posts with Thumbnails