37. மீண்டும் ஒரு புத்திசாலி திருட்டு


புத்திசாலி திருட்டை பத்திய செய்தி படித்து இரண்டு நாள் கூட ஆகல இதோ மீண்டும் ஒன்று. ரூம் போட்டு யோசிப்பாங்களோ???

சேலத்தில் எலக்ட்ரிகல் சாதனங்கள் விற்பனை டீலராக இருப்பவர் ஆறுமுகம். சில மாதத்துக்கு முன் வாடிக்கையாளராக அறிமுகமானார் ஒரு "டிப்டாப்' ஆசாமி. 35 வயதுள்ள அவர் தன்னை வினோத்குமார் என்றும், பெரிய பிசினஸ் மேன் எனவும் கூறினார். அதற்கேற்ப விலையுயர்ந்த கேமரா மொபைல் போன் மற்றும் வாட்ச், பிரேஸ்லெட் அணிந்திருந்தார்.ஒரு நாள் ஆறுமுகத்திடம் சற்றே பதட்டத்துடன் வந்த வினோத்குமார், "சார்... என்னோட ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருந்த பர்ஸ் தொலைந்து விட்டது. அதற்காக விண்ணப்பித்துள்ளேன். எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனது நண்பர்கள் மதுரையில் இருந்து பணம் கொடுக்கவும் தயாராக உள்ளனர். நீங்கள் சம்மதித்தால், உங்களது வங்கிக் கணக்கில் அவர்கள் பணத்தை கட்டிவிடுவர். அந்த பணத்தை எடுத்து என்னிடம் கொடுக்க முடியுமா?' என மிகுந்த பணிவோடு கேட்டார்.

ஆறுமுகமும் தனது வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்தார்.

ஒரே வாரத்தில் மூன்று முறை தலா ரூ.80 ஆயிரம் வீதம் மதுரையில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பணம் கட்டப்பட்டது. அவற்றை அவ்வப்போது வந்து வினோத் வாங்கிச் சென்றார்.

மீண்டும் ஆறுமுகத்திடம் வந்த வினோத், "சார்... எனது மனைவி சிங்கப்பூரில் இருந்து திரும்பி வருகிறார். உங்களுக்கு ஏதேனும் தேவையாக இருந்தால் அவற்றை வாங்கி வரச்சொல்கிறேன்' என்றார்.அதை நம்பிய ஆறுமுகமும், சிங்கப்பூரில் நகைகள் விலை குறைவாக இருக்கும் எனக்கருதி, ரூ. 50 ஆயிரத்துக்கு நகைகள் வாங்கிவர சொன்னார்.

அதற்கான பணத்தை வினோத்குமாரின் மனைவியின் வங்கி கணக்கு எண் என கொடுக்கப்பட்ட எண்ணில் செலுத்தினார். அதன்பின் வினோத் கடை பக்கமே வருவதில்லை. அவரது மொபைல் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

இத்துடன் மதுரையில் இருந்து ஆறுமுகத்தை தேடி போலீசார் வந்தனர். மதுரையில் வேலையில்லாத இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் கட்ட கூறியதாகவும், அதன்படி மூன்று இளைஞர்கள் தலா ரூ.80 ஆயிரத்தை சேலத்தில் உள்ள ஆறுமுகத்தின் வங்கிக் கணக்கில் கட்டியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் தானும் ஏமாற்றப்பட்ட கதையை போலீசாரிடம் விளக்கினார்.

வினோத்தின் மனைவியின் வங்கிக்கணக்கை ஆராய்ந்தபோது, திருப்பூரில் இதே பாணியில் வேறொருவர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த மோசடியில் தமிழகம் முழுவதும் பலரும் ஈடுபட்டிருப்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி: தினமலர் 22/10/07

36. நூதன கொள்ளை


குடந்தை கடையில்

40 பவுன் நகை நூதன கொள்ளை

சகஜமாக பேசி கைவரிசை பலே ஆசாமி துணிகரம்.



கும்பகோணம், அக். 18: கும்பகோணத்தில் நகை கடையில் நூதன முறையில் 40 பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலஅய்யன் தெருவில் வசிப்பவர் பிச்சை (60). இவர் டிஎஸ்ஆர் பெரிய தெரு வில் நகை கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு நேற்று முன்தினம¢ மாலை மாருதி காரில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். பெரிய மனிதர் போன்று தோற்றமளித்த அவர் மகள் திருமணத்துக்கு நகைகள் வேண்டும் என கேட்டுள்ளார். ஊழியர்களை சுண்டி இழுக்கும் வகையில் சகஜமாக பேசினர்.


154 கிராமில் 5 தங்க செயின், 116 கிராமில் 3 நெக்லஸ், 80 கிராமில் 4 ஜோடி தங்க வளையல், ஒரு ஜோடி வைரத்தோடு, இரண்டு நவரத்தின மோதிரம் என ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகைகளை ஊழியர்கள் எடுத்து காட்டியுள்ளனர். நகைகளை பார்த்த அந்த நபர், எனது மனைவியிடம் காட்ட வேண்டும் எனக்கூறினார். அந்த நகைகளுடன் கடை உரிமையாளர் பிச்சையை காரில் அழைத்துக்கொண்டு குடந்தை மருதமுத்து நகருக்கு வந்தார்.


அங்கு ஒரு வீட்டுக்கு முன் காரை நிறுத்தி விட்டு அந்த நபர் உள்ளே சென்றார். நகை கடை அதிபர் பிச்சை வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். நீண்ட நேரமாகியும் நகைகளுடன் சென்றவர் வராததால் பிச்சை வீட்டிற்குள் சென்று விசாரித்தார். அங்கிருந்த ஒரு பெண், வந்தவர் பின்வாசல் வழியாக சென்று விட்ட தாக கூறினார். உடனே வெளியில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரையும் காணவில்லை. இது குறித்து பிச்சை கும்பகோ ணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.


இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நகைகளுடன் மாயமானவர் வந்த கார் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமானது. அவரிடம் குடந் தை செல்ல வேண்டும் என காரை வாடகைக்கு பேசி எடுத்துச் சென்று உள்ளார். நகைகடையில் கைவரிசை காட்டி விட்டு மீண்டும் தஞ்சைக்கு வந்துள்ளார். தஞ்சை வந்ததும், கிருஷ்ணமூர்த்தியின் செல்போனை வாங்கிக்கொண்டு டவர் கிடைக்கவில்லை என்று ஒரு சந்தில் சென்ற அந்த நபர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி தஞ்சையில் போலீசாரிடம் புகார் அளித்தார்.


இது பற்றி தெரிந்ததும், போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கும்பகோணம் அழைத்து சென்று விசாரித்தனர். நகைகள் மற்றும் செல்போனுடன் சென்ற நபர், குடந்தையில் வீடு வாங்க வேண்டும் என கூறி அழைத்து வந்தார். மருதமுத்து நகரில் ஒரு வீட்டை பார்த்தோம். ரூ.16 லட்சத்துக்கு விலை பேசினார். மாலையில் வாஸ்து நிபுணருடன் வருவதாக கூறி விட்டு கிளம்பியவர் நேராக நகை கடைக்கு சென்று கைவரிசை காட்டி விட்டு மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று பின்வாசல் வழியாக தப்பி வந்து காரில் ஏறினார். நகை கடை அதிபரை வாஸ்து நிபுணர் என அந்த வீட்டில் தெரிவித்தார். தஞ்சை வந்ததும் காருக்கு வாடகை தராமல் எனது செல்போனையும் கொ ண்டு சென்று விட்டார் என கார் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் தெரிவித்தார். நகைகளுடன் சென்ற நபரின் புகைப்படத்தை கணினி யில் வரையும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த நபரை பிடிக்க கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


பெரிய மனிதர் தோரணை. எளிதாக பிறர் தன்னை நம்பிவிடும் வகையில் கனிவான பேச்சு. இதுதான் அந்த பலே ஆசாமியின் மூலதனம். இதை வைத்தே வாடகை கொடுக்காமல் கார் டிரைவரை ஏமாற்றியதுடன், அவரது செல்போனையும் உரிமையுடன் கேட்டு வாங்கி எடுத்துச் சென்றுள்ளார். நகைகளை கொள்ளையடிக்கும் முன் வீடு, வாஸ்து, மனைவி என்று ஒரு நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார். கத்தியின்றி, ரத்தமின்றி, கடையின் பூட்டை கூட உடைக்காமல் உரிமையாளரிடமே உரிமையுடன் கேட்டு வாங்கி அந்த நபர் நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
நன்றி
தினகரன்
18/10/07

Related Posts with Thumbnails