56. ஆடி 18

ஆடி பதினெட்டு




வந்தாரை வாழவைப்பது மட்டும் தமிழரது பண்பாடு அல்ல, வாழ வைத்தாரை வணங்கி நன்றி செலுத்துவதும் கூட நமது மரபு, அது மனிதர்கள் ஆனாலும் சரி, மரங்களானாலும் சரி.

தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத்திற்கு மூல காரணமாகி, விவசாயியையும், நம்மையும் வாழ வைக்கும் கதிரவனுக்கு, தை முதல் தேதியில் வணங்கி நன்றியை தெரிவிக்கிறோம்.ஏர் உழுவது முதல் ஏற்றி வருவது வரை உதவிடும் மாட்டுக்கு, தை இரண்டாம் நாளில் பொங்கல் வைத்து சீராட்டுகிறோம்

பயிர்த்தொழிலுக்கு ஆதாரமான நீருக்கும் அதனை வாரிவழங்கும் நதிக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவே ஆடி பதினெட்டாம் பெருக்கு.


water


"சோறுடைத்த" நாட்டை வளமாகி வரும் காவேரிக் கரை ஓர மக்களின் முக்கிய விழாவாக ஆடிப்பெருக்கு காணப்படுகிறது. காவேரி ஓடாத ஊர்களில் கூட, அங்கே உள்ள ஆறுகளிலும் குளங்களிலும், முக்கியமாக பெண்களால் இவ்விழா கொண்டாடப்படுகிறது.



தமிழ் புதினத்தின் சிகரமான "பொன்னியின் செல்வன்" ஆரம்பிப்பது கூட இதேபோன்ற ஒரு ஆடிப்பெருக்கு விழா அன்றுதான். வீர நாராயணன் ஏரிக்கரை ஓரம் ஆடிப்பெருக்கு விழாவை ரசித்த வண்ணம் வருவதாக வந்தியதேவனை அறிமுகப் படுத்தியிருப்பார் அமரர் கல்கி.



ஒவ்வொரு ஆடிப்பெருக்கு அன்றும், ஓடிவரும் காவிரியும்,இழுத்து சென்ற சப்பரமும்(சிறு தேர்), காவிரிக்கரையில் கையில் கட்டிய மஞ்சள் கயிரும், காதோலை(பனை ஓலை) கருகமணியும், புளி சாதத்தில் தொடங்கி, தேங்காய் சாதம், எள் சாதம் என தயிர் சாதத்தில் முடியும் சித்ரான்னங்களும் நினைவுக்கு வராமல் இருக்காது.



அதே நினைவில் ஜானகியின் குயிலோசையுடன் "ஆடி பதினெட்டாம் பெருக்கினைக்" கொண்டாட கீழே உள்ள Play பட்டனை அழுத்துங்கள்.







0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails