59."அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட"


இனிமேல் பேப்பர் வாங்க கடைக்குப் போகவோ அல்லது ஓசியில் படிக்க, டீக் கடைக்கோ போக வேண்டி இருக்காது.

எல்லாம் டிஜிட்டல் மயம்.

அதிலேயும் டெஸ்க் டாப், லேப் டாப் எல்லாம் போய் ஐப் பேடும் , டேப்லட்டும் சர்வ சாதாரணமாய் எல்லார் கைகளிலும் இடம் பிடித்து விட்டது.


இனி காகிதத்தை மடக்கி, திருப்பி, மடித்து, காற்றில் பறக்க விடாமல் பிடித்து படிக்க செய்தியை படிக்க வேண்டி இருக்காது.





சும்மா ஸ்டெயிலா விரல்களினாலேயே விரித்து, சுருக்கி, தொட்டு அழுத்திப் படிக்கலாம்.




என்னதான் I-Padம் Tabletம், News Paper இடத்த பிடிச்சாலும் " "அதுக்கு இதல்லாம் சரிப்பட்டு வராது"

அதை தயாரிச்சவங்களே "அதுக்கு இதல்லாம் சரிப்பட்டு வராது"ன்னு சொல்லிட்டாங்களே. அப்பறமும் ஏன் யோசிக்கிறங்க.

வடிவேலுதான் 'எதுக்கு சரிபட்டு வரமாட்டோம்னு" தெரியமலே ஊரை விட்டுப் போனாரு.

I-Pad எதுக்கு சரிப்பட்டு வராதுன்னு தயாரிப்பளர்கள் சொன்னத வீடியோவை கிளிக் செய்து, நீங்களாவது தெரிஞ்சிகிட்டுப் போங்க.


3 கருத்துரைகள்:

said...

காலத்துக்கு ஏற்ப

நாம் நம்மை மாற்றிக் கொண்டாகவேண்டும்..

said...

நீங்கள் சொல்வது சரிதான் முனைவர் ஐயா.
ஆனாலும் பழையதில் உள்ள சில அற்ப வசதிகள் புதியதில் இல்லையே என்ற ஆதங்க பதிவுதான் இது.
பாருங்களேன் News Papper ஆல் பஸ்ஸில், ரயிலில் இடம் போடலாம். விரித்துப் போட்டு நம் ஆடை அழுக்கு ஆகாமல் படுத்துக் கொள்ளலாம். காற்று வர வில்லை என்றால் விசிறியாக மாற்றிக் கொள்ளலாம்.

விவேக் சொன்னது போல் ப்ஜ்ஜியில் இருக்கும் எண்ணெய் எடுக்க உபயோகப் படுத்தலாம். அதெல்லாம் I-Pad ல் முடியுங்களா?...

ஹி...ஹி...

said...

அருமை,
இன்றுதான் முதல் முறையாக உங்கள் வலையை படித்தேன்.

காவேரி குசும்பு.

Related Posts with Thumbnails