08.எது சைவம்?
எது சைவம்?

(நன்றி: தினகரன் 09-06-2006)
ஆகா வந்திருச்சி! மீனும் சைவத்திற்கு வந்திருச்சி!!.
அப்படி பார்க்காதிங்க! நான் உளறலங்க. நம்ம ம.பி. அமைச்சர் மோதி சொல்லியிருக்காருங்க. ஆமா முட்டையை சைவத்தில சேர்த்தாச்சாமுள்ள. யாரும் சொல்லவே இல்ல!
ஆகா வந்திருச்சி! மீனும் சைவத்திற்கு வந்திருச்சி!!.
அப்படி பார்க்காதிங்க! நான் உளறலங்க. நம்ம ம.பி. அமைச்சர் மோதி சொல்லியிருக்காருங்க. ஆமா முட்டையை சைவத்தில சேர்த்தாச்சாமுள்ள. யாரும் சொல்லவே இல்ல!
WAIT பண்ணுங்க, இன்னும் கொஞ்ச நாள்ல நர மாமிசமும் சைவத்துக்கு வந்துடும்.
பொய்யில்லீங்க. அமைச்சர் சொல்லியிருக்கிற காரணத்தப் பாருங்க புரியும். இனப்பெருக்கம் செய்யாத்தினால இறால் சைவம்னா, குழந்தை இல்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கங்கள்ள, அவங்களத்தான் சொனேன்.
இனி குஞ்சு பொரிக்காத, குட்டி போடாத, முட்டையிடாத எல்லாத்தையும் சைவமாக்கிட்டாங்கன்னா புண்ணியமாப் போகும்.
பொய்யில்லீங்க. அமைச்சர் சொல்லியிருக்கிற காரணத்தப் பாருங்க புரியும். இனப்பெருக்கம் செய்யாத்தினால இறால் சைவம்னா, குழந்தை இல்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கங்கள்ள, அவங்களத்தான் சொனேன்.
இனி குஞ்சு பொரிக்காத, குட்டி போடாத, முட்டையிடாத எல்லாத்தையும் சைவமாக்கிட்டாங்கன்னா புண்ணியமாப் போகும்.
செடியல்லாம் விதை மூலம் இன்ப்பெருக்கம் செய்யுதே, அப்படின்னா அதெல்லாம் அசைவமா?
எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.
எது சைவம்?
உயிர் இல்லாத பொருள்களா?
அப்படின்னா கீரை,செடி,கொடிக்கெல்லாம் உயிர் இல்லையா?
நண்பர் சொன்னார்,"அவைகளுக்கு வலியை பிரித்தறியும் அறிவு இல்லாததால அவை சைவமாம்.
அப்போ வலி தெரியாததெல்லாம் சைவம்ன்னு வச்சிக்கிட்டா ,செத்துப்போனதெல்லாம் சைவமா?
LOGIG எங்கியோ இடிக்குதே.
பாலை சைவமா ஏத்துகிட்டு இருக்கோம், அதே உடலிலே ஓடும் ரத்தம் அசைவமாகிறது.
யாருக்காவது சைவ, அசைவ உணவுக்கான விளக்கம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன். (தமிழ் களஞ்சியத்ல இருக்குதா?)
"ம்.! ஓடு.....! ஓடு.....! முட்டையை கடிச்சு, இறாலைக் கடிச்சி, நம்மையும் கடிக்க
வந்திடப் போறாங்க."
ஆக்கம்:
மதி
- காலம்:
5
கருத்துரைகள்
லேபிள்கள்: News
07. திறமை???

திறமை???
பத்தி எரியுது, பத்தி எரியுது பட்டப் படிப்பினிலே
பாதி இட ஒதுக்கீடு பிரச்சனை,
கத்தி கத்திப் பார்த்து விட்டு மாணவர்கள்
சத்தமின்றி செத்தபின்பும்
மத்தியிலும் மாநிலத்திலும் வைத்தனர்
மீண்டும் வேட்டு, வோட்டுக்காக,
சத்தியமாய் சொல்கிறேன் ஜாதியினி அழியப்போவதில்லை
வீதிப் பெயர்களில் நீக்கிவிட்டாலும்
திறமைக்கில்லை இனி மதிப்பு - குடி
பிறப்பினுக்கே இங்கே சிறப்பு.
மதிப்பெண் பெற்றோருக்கில்லை
மருத்துவ பட்டப் படிப்பு.
ஜாதி சான்றிதழுக்கே செல்லுமிடமெல்லாம் வரவேற்பு
ஆக்கம்:
மதி
- காலம்:
0
கருத்துரைகள்
06.மெய்ப் பொருள் காண்பதறிவு - 2
மெய்ப் பொருள் காண்பதறிவு - 2
நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருள்,"திருட்டுத் தொழில் இழிவானது, என்றாலும் அதனையும் கற்றுக் கொள்ள வேண்டும், பிறகு மறந்துவிட வேண்டும்" என கற்றுக் கொள்வதின் சிறப்பினை விள்க்கும் பழமொழியாகத்தான்.
களவு இழிவானது என்றுத் தெரிந்தும் ஏன் அதனை கற்க வேண்டும்?
கற்றலைப் பற்றி சொல்ல வந்த வள்ளுவர் "கற்பவை" என்று கற்க வேண்டியதை மட்டும் கற்க என்றார். பின் "நிற்க அதற்கு தக" என்றுதான் கூறினார். மறக்கச் சொல்லவில்லை. அதோடு மட்டுமல்லாமல் "கள்ளாமை" பற்றி ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.
என்வே இழிவான, தேவையில்லாத ஒன்றை ஏன் கற்க வேண்டும், பிறகு அதை மறக்க வேண்டும்?
சாதரணமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று படித்தாலே நாம் எந்த லட்சணத்தில் படிக்கிறோம் என்று தெரியும். இதில் மறந்திட வேண்டும் என்று படித்தால் எப்படி?
எனவே அதன் உண்மைப் பொருள் "களவு அகத்து மற" என்றுதான் இருந்திருக்க வேண்டும். அதாவது களவினை மனதளவில் (அகம்) நினைத்துக் கூடப் பார்க்காதே, மறந்துவிடு என்பதாகும்.
மற்ற கூடா ஒழுக்கங்களான 'கொலை', 'பிறன் மனை நோக்குதல்', 'சூது', 'மது'போன்ற பழிச்சொல் ஏற்பவற்றில் களவும் ஒன்று, அதனையும் மறக்க வேண்டும் என பொருள் படும் படி "களவும் அகத்து மற" என மாறி, பின் காலப்போக்கில் 'அ' மறைந்து தற்போதய வடிவமான "களவும் கத்து மற"என மாறியிருக்கலாம்.
ஒரு காற்புள்ளி இடம் மாறியதனால் பொருள் எதிர் மறையாகி ஒரு உயிரே பறிபோன கதை ஞாபகம் இருக்கிறதல்லவா? மறந்தவர்களுக்காக அக் கதை மீண்டுமிங்கே:
ஆங்கிலேயர் காலத்தில் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அவன் மூலம் 'கருணை மனு' அப்போதய வைசிராய்க்கு அனுப்பப்பட்டது. அவரும் 'கருணை மனுவை' பரிசீலித்து மரணதண்டனை வேண்டாமென தீர்மானித்தார். அதனை அப்பொழுதய வழக்கப் படி தந்தி மூலம் "HANG HIM NOT, LEAVE HIM" என்று அடித்து அனுப்பினார்.
எதிர் முனையில் அதனை பெற்று எழுதியவன்,
"HANG HIM, NOT LEAVE HIM" என்று கமாவை மாற்றிப்போட்டு டெலிவரி செய்தார். அந்த அப்பாவி கைதியின் முடிவு என்ன ஆகி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
எழுத்துக்களின் புணர்ச்சி விதி இல்லாத ஆங்கிலத்திலேயே ஒரு கமா செய்தியை எதிர் மறை ஆக்குமெனில்,தமிழில் கேட்கவா வேண்டும்.
எனவே "களவு அகத்து மற" என்பதே பழமொழியாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா.
ஆக்கம்:
மதி
- காலம்:
3
கருத்துரைகள்
05. அதிசயம்!!!!!!!
அதிசயம்!!!!!!!
ஆனால் இது
அவசியம்.
இப்படியும் நடக்குமா?
அம்மாவுக்குத் தெரிந்தால்..?
(இந்த செய்தி தினகரனிலிருந்து எடுக்கப்பட்டது)
ஆக்கம்:
மதி
- காலம்:
1 கருத்துரைகள்
லேபிள்கள்: News
Subscribe to:
Posts (Atom)














