02.படித்ததில் பிடித்தவை



படித்ததில் பிடித்தவை

புதுக்கவிதைகள்

லஞ்சம்
வாங்கினேன்! பிடித்து விட்டார்கள்
கொடுத்தேன்! விட்டுவிட்டார்கள்.

வாழ்க்கை
சலவைச் சட்டைக்குள்
சல்லடை பனியன்.

தோல்வி
விதைக்கும் நேரத்தில் தூங்கியவன் நீ!
அறுவடை நேரத்தில் ஏன் அழுகிறாய்?

பதவி
எங்கள் ஊரில் ஒருவர்
ஊராட்சி மன்ற தலைவரானார்,
சட்ட மன்ற உறுப்பினரானார்,
அமைச்சரானார், அயல் நாட்டுத் தூதுவரானார்,
இறுதிவரை
மனிதனாகாமலே மரணமானார்.

கோலம்
கருப்பு வளையல் கையுடன்
ஒருத்தி
வளைந்து, நெளிந்துப்
பெருக்கிப்போனாள்,
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.

கேட்டவை

ஜீரணமகாத உணவு வயிற்றைக் கெடுக்கும்
ஜீரணமகாத படிப்பு மூளையைக் கெடுக்கும்

கல்லூரி விழாவில் மாணவர் ஒருவர் பேசியது:

"We are not useless;
But we are used less"

(குறிப்பு: என்ன எல்லாம் சுட்டச்சரக்குதானா? சொந்த சரக்கை ஒன்றையும் காணோமே? என்று கேட்பது புரிகிறது. என்னதான் ஆறு, குளம், குட்டைகளில் நீந்தியிருந்தாலும், கடலில் நீந்தப் போகும்போது மற்றவரின் கைபிடித்து முதலில் இறங்குவதுதானே பாதுகாப்பானது, அதுதான் முதலில் "வந்த: சரக்கே இங்கே!)

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails